Wednesday, November 26, 2008

பொழுது விடிந்து வெர்டனை நெருங்க...

A4 நெடுஞ்சாலையில் விமானத்தை ஓட்டுவது போல் அருண் காரை ஓட்ட...வாயு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது அவன் கார். வலப்பக்க ட்ரைவிங் அவனுக்குப் பிரச்சினையேயில்லை. அவன் ஏற்கனவே பலமுறை மைரேஜ் விமானங்களை ஓட்டும் பயிற்சிக்குப் பலமுறை பிரான்ஸ் வந்தவனாகையால், இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல. 280 கி.மீ தூரத்தை மூன்றே மணி நேரத்தில் கடந்திருந்தான்.

ஆரம்பத்தில் மார்னே நதி தீரத்தில் திராட்சைத் தோட்டங்களும், பசிய மரக் கூட்டங்களும், செர்ரி மரத்தில் பழங்கள் செக்கச் செவேலென அடைபிடித்திருந்த காட்சியும், ஏப்ரிகாட் பழத் தோட்டங்களும், பூந்தோட்டமுமாய் மலர்ந்த காட்சி, ரீம்ஸ் நகர் தாண்டியதும் பசுநீல மலைகளாக மாறியது.


பொழுது விடிந்து வெர்டனை நெருங்க நெருங்க வழி நெடுகிலும் ஒரே மயான பூமிக் காட்சிகள்! வழி நெடுகிலும் மரணத்தை நினைவு கூறும் நினைவகங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே தியாகச் சிலுவைகள்! பிரிட்டிஷ், அமெரிக்க, பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்களுக்கென்று தனித்தனி நினைவிடங்கள்!

ஊர் மையத்தை நெருங்குவதற்குள் அவன் கண்ட காட்சிகள் அவன் எலும்புக்கூடு அதிர்வில் சதைக் கோளங்கள் பிய்ந்து சின்னா பின்னமாகி உதிர்வதைப் போல் உணர்ந்தான். வெளியே சில்லிட்ட குளிர் வேறு ஊசியாக அவனை துளைத்தது. அவன் பார்வை அவனுக்கென ஓர் இடத்தை அம்மயான பூமியில் தேடுவது பொலிருந்தது.

வழியில் அவனை டிஜிட்டல் டைரி இடைமறித்து அழைத்தது!
தகவல் கண்டதும் இரத்தம் உரைந்த மனிதனாக அருண் காரை நான்சிக்குத் திருப்பினான்!


(இங்கேயும் ஒரு சொர்க்கம் - முப்பதாவது அத்தியாயத்திலிருந்து...)

No comments: