Friday, November 7, 2008

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்"


தமிழகத்தில் நூல் பதிப்பகங்கள் ஐநூறு உள்ளன. இந்த பதிப்பகங்கள், தனி நபர்கள் பதிக்கக்கூடிய நூல்களைத் தமிழக அரசு வருடம்தோறும் 12 கோடிக்கு வாங்குகின்றது. இப்படி வாங்கக் கூடிய இந்தப்பணம் மக்களது வரிப்பணம்.

கட்டிலிலிருந்து கத்திரிக்காய் வரை விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நூலகவரி என்ற ஒன்று உள்ளது. இந்த வரிப்பணம் அனைத்தும் மக்களுக்காக நூல்களை வாங்கி நூலகங்கள் மூலம் மக்கள் அறிவு வளர்ச்சி அடைய பயன்படுகின்றது.

பதிப்பகங்கள் நல்ல நூல்களை மக்களுக்குத் தேவையானவற்றை பதிப்பிக்க வேண்டும். 25% பதிப்பகங்களே நல்ல நூல்களைப் பதிப்பிக்கின்றன.
கேரளாவில் உள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய முறையில் கௌரவித்து 'ராயல்டி' தருகின்றன. அத்தகைய நிலையை தமிழிலும் உருவாக்க பதிபகங்கள் முன்வர வேண்டும்.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், பூஜை அறையை போல் அங்கு நூல்களை வைப்பதற்கும் ஒரு அறையை நிர்மானியுங்கள். நமக்கு அறிவுக்கண் திறக்க அது வழி வகுக்கும்.

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்" என்றார் கண்ணதாசன். அழுக்கை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் கடலலை சங்கு, பாசிகளை கரையில் கொண்டு வந்து தள்ளுகின்றன. இதனைப் போன்று நல்லவைகளைப் பதிப்பகங்கள் பதிப்பிக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழக நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல் தினகரன் அவர்கள், 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூல் வெளியீட்டு விழாவின் போது உரையாற்றினார்.

No comments: