Sunday, August 17, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சிதறல்கள்... ...


தாரிணி : இப்படி முற்றும் துறந்த முனிவர் மாதிரி பேசறீங்க. உங்க நடத்தை அப்படியில்லையே? விமானங்கள் சாகசம் சரி. ஆனா ஆர்டின்ல அம்பு விட்டு பறந்தீர்களே? முனிவர்களுக்கு எதற்கு இந்த வேலை? கன்ட்ரோலர் ஆப் தி டீம் ஆப்பரேசன்ஸ் ஆச்சே! பதில் சொல்லுங்க. அதுவும் மூன்றாவதாக இதயத்தைத் துளைத்துச் சென்ற விமானத்தை ஓட்டியது நீங்கள்தானாமே!


".... .... ...."


"என்ன பேச்சே காணோம். இதயங்களை துளைத்துப் பார்ப்பதில்தான் உங்க ரசனை இருக்கும் போலிருக்கு சரிதானே?"


அருண் : இதயத்தைப்பற்றி இதயமில்லாதவங்க கிட்ட என்னத்தை பேசறதுன்னுதான் யோசிக்கிறேன். நான் ரோட்ல சரியா இடப்புறமாத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். தவறான வழில போறவங்க என்னை பார்த்து விரலை நீட்ட வேண்டாம்.

No comments: