Sunday, August 31, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II

தாய் ஒலிம்பியா அருகில், உப்பரிகையில் சோகமாய் சிறுவன் அலெக்ஸாண்டர் அமர்ந்திருக்க, இரண்டாம் ஃபிலிப் மன்னன் கிரேக்கம் முழுவதும் வாகை சூடிய பெருமிதத்தில் ஊர்வலமாய் தலைநகரில் பிரவேசித்தான்.

ஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி "மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை? என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் "தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே?"

இதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு "மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு! நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை!" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.

(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)

No comments: